புது நிதியாண்டில்...முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!


சி.சரவணன்
புதிய நிதி ஆண்டு, அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. காரணம், நாடாளுமன்ற தேர்தல் நடந்து புதிய மத்திய அரசு அமையப்போகிறது. இந்த நிதி ஆண்டு, பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல முதலீட்டு வாய்ப்பை அள்ளிகொடுக்கும் என்கிறார், மும்பையைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர். அது எப்படி நடக்கும் என்பதை விரிவாக விளக்கி சொன்னார்.

''2014 ஏப்ரல் முதல் தேதி முதல் 2015 மார்ச் 31-ம் தேதிக்குள் நிஃப்டி புள்ளிகள், ஒருமுறையாவது 6000-க்கு கீழே இறங்க அதிக வாய்ப்பிருக்கிறது. இந்த இறக்கத்துக்குப் பிறகு சந்தை மேலே சென்றுவிடும். 74 மாதங்களுக்குப் பிறகு, நிஃப்டி பழைய உச்சத்தைத் தாண்டி, இப்போது நிலை பெற்றிருக்கிறது. இந்திய பங்குச் சந்தைக்கான ஏற்றம் 2013 ஆகஸ்ட் மாதத்திலேயே தொடங்கிவிட்டது. இது 2016-17-ம் ஆண்டுவரைக்கும் தொடரும். இந்த ஏற்றச் சந்தையில் கரெக்ஷன் என்பது வரவேற்கத்தக்கதே. அதனை முதலீட்டுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது.
நிஃப்டியின் தற்போதைய மேஜர் ரெசிஸ்டன்ஸ் 6800-ஆக உள்ளது. தேர்தலுக்குமுன் இதனைத் தாண்டவில்லை என்றால் இன்னும் 3 அல்லது 4 வாரத்தில் நிஃப்டி 6000 அளவுக்கு இறங்க வாய்ப்பிருக்கிறது. சந்தையில் தற்போது நிலவும், செல்லிங் பிரஷர் மற்றும் பிராஃபிட் புக்கிங் இதனை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.
2015 மார்ச் மாதத்துக்குள் நிஃப்டி புள்ளிகள் 7800-8600-க்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. 2016 ஜூன் - டிசம்பரில் நிஃப்டி புள்ளிகள் இலக்கு 13500 - 15000'' என்றவர், சற்று நிறுத்தி... ''பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சிக்கு வந்தால், பொதுத்துறை நிறுவனங்கள், சிமென்ட், மின்சாரம், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் உள்ளிட்ட துறைகள் வேகமான வளர்ச்சியைக் காணும். அந்தவகையில், 16 பங்குகளைப் பரிந்துரை செய்கிறேன்'' என்றவர் பங்குகளைச் சொன்னார்.

 கடந்த 2 - 3 ஆண்டுகளாக ஸ்டீல் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படவில்லை. 2014-15-ம் ஆண்டில் செயில் நிறுவனம், அதன் உற்பத்தித்திறனை அதிகரிக்க உள்ளது. புதிய ஆட்சி அமைந்து, அது உள்கட்டமைப்பு பணிகளுக்கு அதிகம் செலவிடும். அப்போது ஸ்டீல் தேவை உயரும். இது, செயில் நிறுவனத்துக்கு லாபமாக அமையும். இந்த நிறுவனப் பங்கின் விலை புத்தக மதிப்புக்கு குறைவாக இருப்பது கவர்ச்சிகரமான அம்சம்.

 ரொக்க கையிருப்பு அதிகம்கொண்ட கம்பெனி (மார்ச் 2013-ல் ரூ.2,598 கோடி) என்பதோடு கடனில்லா நிறுவனமும் கூட. மாங்கனீஸ் உற்பத்தியில் இந்தியாவின் பெரிய நிறுவனமான இதற்கு அண்மையில் புதிதாகச் சுரங்கம் ஒன்று கிடைத்திருக்கிறது. ஸ்டீல் தேவை அதிகரிக்கும்போது, கூடவே மாங்கனீஸ் தேவையும் உயரும். அப்போது மொயில் நிறுவனத்தில் லாபம் மேம்படும்.

 பொதுத்துறையைச் சேர்ந்த மகாரத்தின நிறுவனமான இது, ஆசியாவிலேயே மிகப் பெரிய மின் உற்பத்தி நிறுவனமாக இருக்கிறது. இதன் தற்போதைய உற்பத்தித்திறன் ஆண்டுக்கு 42,964 மெகா வாட்-ஆக உள்ளது. இது இன்னும் 3 - 4 ஆண்டுகளில் 60,000 மெகா வாட்-ஆக அதிகரிக்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த மின் உற்பத்தி நிறுவனமாக இருப்பது இதன் சிறப்பு அம்சம்.

 பொதுத்துறை நிறுவனமான இது, அண்மையில் ஃபாலோ ஆன் இஸ்யூ வந்தது. இதற்கு சுமார் 3 மடங்கு அதிக ஆதரவு கிடைத்தது. ஆயில் அண்ட் காஸ் கட்டுமான பிரிவில் அரை நூற்றாண்டு காலமாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ரொக்க கையிருப்பு (மார்ச் 2013-ல் ரூ.2,069 கோடி) அதிகமாகக்கொண்டிருக்கும் கம்பெனி என்பதோடு கடனில்லா நிறுவனம்.

 அண்மையில் இந்த நிறுவனம், அதன் ஒட்டுமொத்த பிரிவுகளை மறுசீரமைப்பு செய்துள்ளது. இதன்மூலம் உற்பத்திச் செலவு கணிசமாகக் குறைந்துள்ளது. இதன்மூலம் விலையைக் குறைத்து, போட்டி நிறுவனங்களுக்கு வலிமையான சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்டர்கள் அதிகரித்திருப்பதும் இந்த நிறுவனத்துக்குக் கூடுதல் பலம்.

 இந்த நிறுவனத்தின் மின் உற்பத்தி 75% காஸ் மூலமும், 25% கோல் மூலமும் நடக்கிறது. அண்மையில் உள்நாட்டில் காஸ் போதிய அளவுக்குக் கிடைக்கவில்லை என்பதால் சர்வதேச சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டி இருந்தது. இந்த நிலை மாறி உள்நாட்டியிலேயே ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி, ஆயில் இந்தியா போன்ற நிறுவனங்களிடம் குறைந்த விலையில் வாங்கும்நிலை உருவாகி இருக்கிறது. இது டாரன்ட் பவருக்கு பாசிடிவ்வான விஷயம்.


தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம்தான் இந்தியாவிலேயே உற்பத்தித் துறையில் முதன்முதலாக ஐஎஸ்ஓ 9000 தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனம். ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் இதுவரை வேலைநிறுத்தம் என்பதே கிடையாது. அந்தவகையில் இதன் செயல்பாடு எப்போதும் சிறப்பாக இருந்து வருகிறது.

 டீசல் மற்றும் காஸ் இன்ஜின் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக கும்மின்ஸ் இந்தியா இருக்கிறது. இதன் வருமானத்தில் 30 சதவிகிதம் ஏற்றுமதி மூலம் வந்துகொண்டிருக்கிறது. அண்மைக்காலத்தில் பல பங்கு தரகு நிறுவனங்கள் கும்மின்ஸ் இந்தியா பங்கை வாங்க பரிந்துரை செய்து வருகின்றன.

 இந்திய அளவில் அதிகத் தொலைவு சாலைகளை (சுமார் 13,100 கி.மீ) நிர்வகிக்கும் நிறுவனமாக இது இருக்கிறது. ரொக்க கையிருப்பு 1,930 கோடி ரூபாய் என்பது இதன் கூடுதல் பலம்.ஸ்பெயின், போர்ச்சுக்கல், லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த நிறுவனம் கால்பதித்து சிறப்பாக இயங்கி வருகிறது.

 சிமென்ட் துறையில் இந்த நிறுவனம் வலிமையான இடத்தில் இருக்கிறது. கடந்த 2 - 3 ஆண்டுகளாக நாட்டில் சிமென்ட் தேவை என்பது குறைந்து காணப்பட்டதால், உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படவில்லை. புதிய ஆட்சி அமைந்து உள்கட்டமைப்புக்கு அதிகம் செலவு செய்யும்போது சிமென்ட் தேவை தானாகவே கூடிவிடும். இது ராம்கோ சிமென்டுக்கு லாபகரமாக அமையும்.

 ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், சிறப்பாக - லாபகரமாக இயங்க வேண்டும் என்றால், அது நம்பிக்கைக்குரிய நிறுவனமாக இருக்க வேண்டும். அதுபோன்ற ஒரு நிறுவனம்தான் கோத்ரெஜ் பிராபர்டீஸ். இந்த நிறுவனத்தின் டீலிங் எல்லாம் காசோலை வழி நடப்பதால் மோசடி என்கிற பேச்சுக்கே இடம் இல்லை. இதன் புராஜெக்ட்கள் நன்றாக இருக்கிறது. மேலும், கார்ப்பரேட் கவர்ன்ஸ் மிகச் சிறப்பாக இருக்கிறது.
 டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் அக்ரோ கெமிக்கல் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இதன் செயல்பாடு அதிக நாட்களாக நன்றாக இல்லாமல் இருந்தது. விரிவாக்கத்தில் களம் இறங்கியபிறகு  நிறுவனத்தின் செயல்பாடு மேம்படத் தொடங்கி இருக்கிறது. அந்தவகையில் இந்த நிறுவனப் பங்கின் விலையும் கணிசமாக அதிகரிக்கக்கூடும்.

 டாடா குழுமத்தைச் சேர்ந்த இது தேயிலை, காபி தூள், வேளாண் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. அண்மையில் கரெக்ஷனை சந்தித்த இந்த நிறுவனப் பங்கின் விலை உயரத் தொடங்கி இருக்கிறது.

 200 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி. இதன் ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கை 21,000-க்கு மேல். தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கிறது.
வங்கியின் புதிய சேர்மனாக அருந்ததி பட்டாச்சாரியா வந்தபிறகு வங்கியின் செயல்பாடுகள் முன்பைவிட வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அந்தவகையில் லாபம் மேம்படும்.

 4,550-க்கும் மேற்பட்ட கிளைகளும், அதற்கு இணையான எண்ணிக்கையில் ஏடிஎம் மையங்களும் உள்ளன. கேன்ஃபின் ஹோம்ஸ் உள்ளிட்ட 7 துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது.


இந்தியாவின் சர்வதேச வங்கி என்று அழைக்கப்படும் இது தொழில்நுட்ப வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் முன்னணியில் இருக்கிறது.
பரிந்துரை செய்த பங்குகளில் நிதானமாக எஸ்ஐபி முறையில் முதலீட்டை இப்போதே ஆரம்பித்துவிடலாம். சந்தை மிகவும் இறங்கும் நேரத்தில் முதலீட்டை கொஞ்சம் அதிகரித்துக்கொள்ளலாம். பொதுத்துறை வங்கிகள், போதிய பங்கு மூலதனம் இல்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அந்தப் பங்குகளைப் பரிந்துரை செய்வது ஏன் என முதலீட்டாளர்கள் குழம்பக்கூடும். பாரதிய ஜனதா தலைமையிலான அரசு மத்தியில் அமையும்பட்சத்தில் அரசுத் துறை நிறுவனங்களில் அரசியல் தலையீடு குறைந்துவிடும். அப்போது இந்த வங்கிகளின் செயல்பாடு தானே மேம்பட்டுவிடும்'' என்றார்.
* இலக்கு விலை 12 முதல் 15 மாதங்கள். பங்கு விலை மார்ச் 27 நிலவரம்.

பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தஙக்ள்! - 1


நன்றி - நாணயம் விகடன்.

பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள்!


நன்றி - நாணயம் விகடன்.